தொடரும் தோழர்கள்

Wednesday, April 18, 2018

மகளே ஆசிபா!


பள்ளி சென்று
வீடு திரும்பிய 
என் எட்டு வயது மகளை
பதற்றத்துடன் 
வாரி அணைத்தேன்!
மகளே ஆசிபா!

யாருப்பா அது?
என்றாள் மகள்!
அவளும் உன் போல 
அழகு குழந்தை யம்மா 
என்றேன்.. 

அப்போ எனக்கு 
அக்காவா தங்கையா?
கண்கள் பட படக்க
ஆசையாய் ஆவலாய்
கேள்விகள்

உங்கள் இருவருக்கும் 
ஒரே வயது தானம்மா
என்றேன்.
எங்கே அவள் எனக்
கேள்வி வர

கோவிலுக்குள் போனாள் 
சாமியை பார்க்க போனாளோ!
சாமியாக ஆனாளோ

மகளே ஆசிபா!

- அ. மு. நெருடா

2 comments:

  1. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    ReplyDelete
  2. நெகிழ்வு மிக்க கவிதை,

    ReplyDelete